சிங்காநல்லூரில் இரயில்வே கேட்டினை சேதப்படுத்திய லாரி ஓட்டுநர் கைது

இரயில்வே கேட்டினை சேதப்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநர் விஷ்ணுவர்தனை இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: கடந்த 11.03.2024 அன்று இருகூர் மற்றும் பீளமெடு இரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்காநல்லூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ள இரயில்வே கேட்டினை கடந்து செல்லும் போது ஒரு லாரியானது இரயில்வே கேட்டின் ஒரு பகுதியை சேதப்படுத்தியது. மேலும் வண்டியின் ஓட்டுநர் அந்த இடத்தில் நிற்காமல் தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சவுரவ் குமார், சேலம் கோட்ட ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை ( RPF ) மற்றும் ரதீஷ் பாபு, உதவி ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை, கோவை ஆகியோர்களின் உத்தரவின் பேரில் கிரீஸ், ஆய்வாளர், RPF, கோயம்புத்தூர் மேற்பார்வையில், பாலையா உதவி ஆய்வாளர், RPF, கோயம்புத்தூர் மற்றும் ராஜா காவலர், RPF, கோயம்புத்தூர் குழுவாக நியமிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வந்தது.

பின்னர் சம்பவ இடத்திலிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், நேரடி சாட்சிகளை விசாரித்தும் விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வண்டியை அடையாளம் காண முயற்சி செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 18.03.2024 சேலம் வாழப்பாடியை சேர்ந்த விஷ்ணுவர்தன் வயது 22 என்ற ஓட்டுநரை கைது செய்தும், வண்டியை பறிமுதல் செய்தும் கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஓட்டுனரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...