சிங்காநல்லூரில் இரயில்வே கேட்டினை சேதப்படுத்திய லாரி ஓட்டுநர் கைது

இரயில்வே கேட்டினை சேதப்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநர் விஷ்ணுவர்தனை இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: கடந்த 11.03.2024 அன்று இருகூர் மற்றும் பீளமெடு இரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்காநல்லூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ள இரயில்வே கேட்டினை கடந்து செல்லும் போது ஒரு லாரியானது இரயில்வே கேட்டின் ஒரு பகுதியை சேதப்படுத்தியது. மேலும் வண்டியின் ஓட்டுநர் அந்த இடத்தில் நிற்காமல் தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சவுரவ் குமார், சேலம் கோட்ட ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை ( RPF ) மற்றும் ரதீஷ் பாபு, உதவி ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை, கோவை ஆகியோர்களின் உத்தரவின் பேரில் கிரீஸ், ஆய்வாளர், RPF, கோயம்புத்தூர் மேற்பார்வையில், பாலையா உதவி ஆய்வாளர், RPF, கோயம்புத்தூர் மற்றும் ராஜா காவலர், RPF, கோயம்புத்தூர் குழுவாக நியமிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வந்தது.

பின்னர் சம்பவ இடத்திலிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், நேரடி சாட்சிகளை விசாரித்தும் விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வண்டியை அடையாளம் காண முயற்சி செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 18.03.2024 சேலம் வாழப்பாடியை சேர்ந்த விஷ்ணுவர்தன் வயது 22 என்ற ஓட்டுநரை கைது செய்தும், வண்டியை பறிமுதல் செய்தும் கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஓட்டுனரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...