திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 3,81,200 ரூபாய் பணம் பறிமுதல்

திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில், பிஎன் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.



திருப்பூர்: தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 64 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிஎன் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 500 ருபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதனை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.



இதே போல் செந்தில்குமார் என்பவர் 74 ஆயிரத்து 600 ரூபாய் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதையும் பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர், பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 81 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரமான பவன் குமாரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...