தொண்டாமுத்தூரில் சீராக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக வழங்கபடவில்லை என குற்றஞ்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று தொண்டாமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டோர் 15 பேருந்துகளையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, வறட்சியான சூழ்நிலை மற்றும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் தண்ணீர் விநியோகிக்க போதுமான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திறகு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...