உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நீர் மோர் வழங்கும் பணி துவக்கம்

கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கி உள்ளது. திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலா என ஒருங்கிணைந்த தலமான இங்குள்ள மலைக்குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும், மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.



இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கமான காலத்திற்கு முன்பாகவே தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக பஞ்சலிங்க அருவியை நாடி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் கணிசமான அளவில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கி உள்ளது. அதன்படி திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.



அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், தேவராஜ், பானுரேகா, ராஜபாலன், கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள். இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டமானது கோடை காலம் முடியும் வரையிலும் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...