காங்கேயத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ – தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் காலியாக இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றப்பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு காலி மனைகளாக உள்ளது.

இந்த நிலம் முழுவதும் காய்ந்த புற்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் மாலை திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மேலும் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் தீ பரவி குடியிருப்புக்குள் வராமல் தடுக்க உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



இந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அந்த வறண்ட காய்ந்த நிலப்பரப்பில் காட்டுத்தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்‌.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...