காங்கேயத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ – தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் காலியாக இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றப்பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு காலி மனைகளாக உள்ளது.

இந்த நிலம் முழுவதும் காய்ந்த புற்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் மாலை திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மேலும் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் தீ பரவி குடியிருப்புக்குள் வராமல் தடுக்க உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



இந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அந்த வறண்ட காய்ந்த நிலப்பரப்பில் காட்டுத்தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்‌.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...