தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

2-வது வார்டு நஞ்சியம்பாளையம் தெரு புதூர் பகுதியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால், ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்த் தேக்க தொட்டி கட்டிடம் உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி பகுதியில் புதிய நூலக கட்டிடம், மழை நீர் வடிகால் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்க ரூ.55 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து நகராட்சி 4 மற்றும் 7 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2-வது வார்டு நஞ்சியம்பாளையம் தெரு புதூர் பகுதியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கும், புதியகுடிநீர் தொட்டி, ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்த் தேக்க தொட்டி கட்டிடம் உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அப்போது நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், நகர துணை செயலாளர்கள் வி.கமலக்கண்ணன், செலின் பிலோமினா, 4-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் ராசாத்திபாணடியன், முபாரக் அலி, 4-வது வார்டு நிர்வாகி இல.மணி, தில்லை முத்து, 3-வது வார்டு செயலாளர் மோகன்ராஜ், பிரதிநிதி மணிவேல், துணைச் செயலாளர் சோமு, பொருளாளர் ஜெயராஜ், அவைதலைவர் கிருஷ்ணமூர்த்தி, மருதமுத்து, ஓவியர் மின்னல், மணி, சண்முகம், திருநாவுக்கரசு, சாரதி, குணசேகரன், பெரியசாமி, தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...