கோவையில் சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள் - சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் சிசிடிவி வீடியோ

சூப்பர் கார்டன் பகுதியில் சிறுமி ஒருவர் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை துரத்தியது. அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டில் உள்ளே நுழைந்ததால் தெரு நாயிடமிருந்து சிறுமி தப்பினார்.


கோவை:கோவை மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு உட்பட்ட சூப்பர் கார்டன் பகுதியில் சிறுமி ஒருவர் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை துரத்தியது. அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டில் உள்ளே நுழைந்ததால் தெரு நாயிடமிருந்து சிறுமி தப்பினார்.

தெருநாய்கள் சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னே அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெரு நாய் சிறுமியை துரத்திய காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...