கோவை - சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் மார்ச் 31-ல் தொடக்கம்

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவையும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கும் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை, சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

தொழில் நகரான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் விமான சேவை வழங்கப்படுகின்றன. முன்பு கோவையில் இருந்து முதல் விமானம் காலை 6 மணியளவிலும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணியளவிலும் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோவையில் இருந்து முதல் விமானம் சென்னைக்கு தினமும் காலை 10 மணிக்கு மேல் தான் வழங்கப்படுகிறது. அதே போல் சென்னையில் இருந்து இரவு 6.50 மணிக்கு கோவைக்கு கடைசி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு நாள் பணி நிமித்தமாக சென்னை சென்று திரும்ப முடியாமல் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், தொழில்துறையினர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மார்ச் 31-ம் தேதி முதல் கோவை-சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறும் போது, கோவை -சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இதன்படி கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவை கிடைக்கும். அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கு வழங்கப்படும். இந்த விமான சேவை பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம் என்றனர்.

தொழில்துறையினர் கூறும் போது, கோவை- சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய சேவைகளால் சென்னைக்கு ஒரு நாள் பணி நிமித்தமாக சென்று வருபவர்கள் அன்றைய தினமே கோவை திரும்ப பெரிதும் உதவும். அதே போல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மாலை இரவு 8 மணியளவில் வந்து அங்கிருந்து கோவைக்கு வர விரும்பும் பயணிகளுக்கு இந்த புதிய சேவை மிகவும் பயனளிக்கும் என்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...