உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் எண்ணிக்கை

12 உண்டியல்கள் மூலமாக ரூபாய் நோட்டுகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 325 ரூபாயும், நாணயங்கள் 37 ஆயிரத்து 881ரூபாயும் ஆக மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 206 ரூபாய் சேர்ந்துள்ளது. கோசாலை உண்டியல் மூலமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரூ. 1158 கிடைத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மலைக்குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருகை தருகின்ற பக்தர்கள் மும்மூர்த்திகளுக்கு நேர்த்தி கடனாகவும், காணிக்கையாகவும் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவிலில் உள்ள கோசாலை உண்டியல் உட்பட 13 உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர் அதில் சேகரமான காணிக்கை கோவில் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது.



அதன்படி, 12 உண்டியல்கள் மூலமாக ரூபாய் நோட்டுகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 325 ரூபாயும், நாணயங்கள் 37 ஆயிரத்து 881ரூபாயும் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 206 சேர்ந்துள்ளது. அதேபோன்று கோசாலை உண்டியல் மூலமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரூ. 1158 கிடைத்துள்ளது.

இந்த உண்டியல்கள் கடந்த முறை ஜனவரி 10 -ம் தேதி எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...