உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் எண்ணிக்கை

12 உண்டியல்கள் மூலமாக ரூபாய் நோட்டுகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 325 ரூபாயும், நாணயங்கள் 37 ஆயிரத்து 881ரூபாயும் ஆக மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 206 ரூபாய் சேர்ந்துள்ளது. கோசாலை உண்டியல் மூலமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரூ. 1158 கிடைத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மலைக்குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருகை தருகின்ற பக்தர்கள் மும்மூர்த்திகளுக்கு நேர்த்தி கடனாகவும், காணிக்கையாகவும் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவிலில் உள்ள கோசாலை உண்டியல் உட்பட 13 உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர் அதில் சேகரமான காணிக்கை கோவில் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது.



அதன்படி, 12 உண்டியல்கள் மூலமாக ரூபாய் நோட்டுகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 325 ரூபாயும், நாணயங்கள் 37 ஆயிரத்து 881ரூபாயும் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 206 சேர்ந்துள்ளது. அதேபோன்று கோசாலை உண்டியல் மூலமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரூ. 1158 கிடைத்துள்ளது.

இந்த உண்டியல்கள் கடந்த முறை ஜனவரி 10 -ம் தேதி எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...