கோவை லங்கா கார்னர் பகுதியில் பச்சை துணி மூலம் போஸ்டர் ஒட்டும் இடங்கள் மறைப்பு

கோவையில் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு கெடுவதாக கூறி போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் மறைத்து வைத்துள்ளனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் தேர்தல் பணிகளில் போஸ்டர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு கட்சிகள் போஸ்டர் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்புகளையும் தங்கள் கட்சியின் செல்வாக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாநகரைப் பொறுத்தவரை லங்கா கார்னர், நஞ்சப்பா சாலை, கோட்டைமேடு, ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் அவர்களது போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக லங்கா கார்னர் பகுதி என்பது ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் செல்லும் பகுதியின் முக்கிய சந்திப்பு என்பதால் இங்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் பார்வைக்கு எளிதில் சென்றடையும்.

இந்நிலையில் இன்று (மார்ச்.14) மாநகராட்சியினர், லங்கா கார்னர் பகுதியில் வழக்கமாக போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு கெடுவதாகவும், இதனால் போஸ்டர்கள் ஒட்ட மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. பின்னர் போஸ்டர்கள் ஒட்டும் சுவர்கள் முழுவதும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டன.இந்நிலையில் தற்போது இப்பகுதி மறைக்கப்பட்டுள்ளதால் இங்கும் ஏதேனும் கலை ஓவியங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...