நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு எம்.ஜி.ஆர் மக்கள் இயக்கம் ஆதரவு - உடுமலையில் நிறுவன தலைவர் லியாகத் அலிகான் பேட்டி

மத்திய அரசு சுய லாபத்திற்காக தேர்தலை கருத்தில் கொண்டு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தமிழக அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது என்று எம்ஜிஆர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லியாகத் அலிகான் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள எம்.ஜி.ஆர் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத் தலைவர் லியாகத் அலிகான் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் மக்கள் இயக்கம் இந்திய கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது

என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா கூட்டணி ஆதரவு தெரிவிப்பதற்கான காரணம் இந்தியா முழுவதும் தற்பொழுது இந்திய கூட்டணியை தமிழக முதல்வர்

மு.க. ஸ்டாலின் மிகச் சிறந்த கட்டமைப்பை உருவாக்கி உள்ளார். எனவே இந்தியா முழுவதும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வருவதற்கான பணிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது மத்திய அரசு சுய லாபத்திற்காக தேர்தலை கருத்தில் கொண்டு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தமிழக அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.



குடியுரிமை சட்டத்தால் மக்கள் மத்தியில் உணர்வுகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து உள்ளார். தமிழக முதல்வரின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக எம்.ஜி.ஆர் மக்கள் இயக்கமும் குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவார்கள், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, திராவிட தமிழர் கட்சி தங்கவேல், தமிழர் பண்பாட்டு பேரவை பால் நாராயணன், அப்பாஸ், எம்ஜிஆர் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது மற்றும் அந்தியூர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...