உடுமலை அருகே கொழுமம் சோதனை சாவடி பகுதியில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

இரவு மற்றும் பகல் நேரத்தில் சாலையில் உலா வந்து கொண்டிருக்கும் முதலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. முதலை நடமாட்டம் உள்ளதால் அமராவதி ஆற்றங்கரை மற்றும் பாலம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பழனி சாலையில் கொழுமம் சோதனை சுவாடி அருகில் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முதலை ஒன்று சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் உலா வந்து கொண்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து அமராவதி நகர் முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இதற்கிடையில் இப்பகுதிகள் சாலையில் உலா வந்து கொண்டிருக்கும் முதலையின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கொழுமம் பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் அமராவதி ஆற்றங்கரை மற்றும் பாலம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...