உடுமலை அருகே கொழுமம் சோதனை சாவடி பகுதியில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

இரவு மற்றும் பகல் நேரத்தில் சாலையில் உலா வந்து கொண்டிருக்கும் முதலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. முதலை நடமாட்டம் உள்ளதால் அமராவதி ஆற்றங்கரை மற்றும் பாலம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பழனி சாலையில் கொழுமம் சோதனை சுவாடி அருகில் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முதலை ஒன்று சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் உலா வந்து கொண்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து அமராவதி நகர் முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இதற்கிடையில் இப்பகுதிகள் சாலையில் உலா வந்து கொண்டிருக்கும் முதலையின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கொழுமம் பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் அமராவதி ஆற்றங்கரை மற்றும் பாலம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...