தாராபுரம் முதல் சென்னை வரை மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30 சென்னைக்கும், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, தாராபுரத்திற்கும் புதிய பேருந்து வரும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் முதல் சென்னை வரை இயக்கப்பட்டு வந்த பேருந்து பல ஆண்டுகளாக வருவாய் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பேருந்து சேவையை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்கள், புதிய பேருந்துகள் இயக்கம் மற்றும் நகரப்பேருந்து வழித்தட நீடிப்பு செய்து இயக்கும் பேருந்துகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.



இது குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, சென்னைக்கும், அதே போல சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, தாராபுரத்திற்கும் இந்த புதிய பேருந்து வந்தடையும். இந்த புதிய பேருந்து வசதிகளினால் இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், தாராபுரம் பகுதியிலுள்ள உடையார்பாளையத்திற்கு கூடுதலாக நகரப்பேருந்துகள் புதிதாக இரண்டு நடைகள் இயக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ஏற்கனவே இயக்கப்பட்டிருந்த கோவை-திருச்செந்தூருக்கு இரண்டு புதிய பேருந்துகளும், ஊட்டி மண்டலத்திலிருந்து கூடலூர் திருச்சிக்கு 1 புதிய பேருந்தும், ஈரோடு மண்டலத்திலிருந்து அந்தியூர்- சென்னைக்கு 1 புதிய பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்களும், புதிய பேருந்துகளும் இயக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது சார்பாகவும் இந்த பகுதியின் பொதுமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...