விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இளைஞர்கள் போராட்டம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!



டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில்  போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். 



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திடீரென திரண்ட இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இளைஞர்கள் பேசுகையில், 'டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் தற்போது போராட்டம் நடத்தி வருகிறோம். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் வெளியே வரவேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது. 



ஜல்லிக்கட்டு போராட்டத்தை வென்றெடுத்தது போல், இந்த போராட்டத்திலும் இளைஞர்கள் வெற்றி பெறுவோம்' என்றனர்.

 முன்னதாக இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை வஉசி மைதானத்தில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் காவல்துறையினர் வஉசி மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாக தெரிவித்து போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால், அவ்வாறு வஉசி மைதானத்தில் எவ்வித தடைஉத்தரவும் அமல்படுத்தவில்லை. அதனால், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாங்கள் திரண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம்" என்றனர்.



தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் . 



தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்டிருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...