உடுமலை அருகே சின்னகுமாரபாளையத்தில் தம்பதியினரை கட்டிபோட்டு நகை கொள்ளை – மூன்று பேர் கைது

சௌந்தர்ராஜனையும், அவரது மனைவியையும் கட்டிப்போட்டு 9 சவரன் தாலிக்கொடி, வைரக்கம்மல், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.24000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னகுமாரபாளையத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் சௌந்தரராஜன் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் கதவை யாரோ தட்டியதால் சௌந்தர்ராஜனும் அவரது மனைவியும் வெளியே வந்தபோது மூன்று பேர் அவர்களை கயிற்றால் கட்டியும், கத்தியை காட்டி மிரட்டியும் 9 சவரன் தாலிக்கொடி, வைரக்கம்மல், இருசக்கர வாகனம் மற்றும் பணம் 24000/- ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து அமராவதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி உடுமலை துணை காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நிர்மலா தேவி, உதவி ஆய்வாளர்கள் சண்முக மூர்த்தி, பஞ்சலிங்கம் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்திலிருந்த கைரேகை பதிவுகளை கொண்டு மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முருகானந்தம், சிவகுமார்,சித்திரை வேல் ஆகியோர் கைது செய்தனர். மேலும் கொள்ளையடிக்கபட்ட தாலிக்கொடி, வைரகம்மல் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...