கோவை பெரியநாயக்கன்பாளையம் புதிய மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: தேசத்தின் முக்கிய நகரங்களை இணைக்கிற வகையிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.11) துவக்கி வைத்தார்.

அதன்படி கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் J. ராமகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தல் படி மாவட்ட பொது செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி. கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட செயலாளர் சௌந்தர்ராஜன், பெரியநாயக்கன்பாளையம் மண்டல் தலைவர்கள் மகேந்திரன், ஜெயபிரகாஷ் புவனேஸ்வரன் ஆகியோருடன் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்கள்.

மேலும் இதேபோல 905 கோடி ரூபாய் மதிப்பில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலைப் பணி அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், இவற்றை உள்ளடக்கி 3200 கோடி ரூபாய் மதிப்பிலானபணி நிறைவடைந்தவற்றை திறந்து வைத்ததோடு, அடிக்கலும் நாட்டினார்.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில், 112 நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...