கோவையில் வரும் சனிக்கிழமை வரை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என அறிவிப்பு

கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கோவை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, சென்னையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று (மார்ச்.11) முதல் வரும் வெள்ளிக்கிழமை (15ம் தேதி) வரை வெப்பம் 35 டிகிரி வரை பதிவாகும் என்றும், சனிக்கிழமை 36 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று முதல் வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 38 டிகிரி வரை பதிவாகுமென்றும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெப்பம் 39 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுவையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 34 டிகிரி வரை பதிவாகும் என்றும், வெள்ளி, சனிக்கிழமையன்று 35 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...