குருக்கம்பாளையத்தில் 10 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு - பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் மனு

அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குருக்கம்பாளைய ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் குருக்கம்பாளையத்தில் ஸ்ரீ பட்டாசு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஊர் மக்கள் அனைவரும் வழிபாட்டு வருகின்றனர். இந்நிலையில் சுந்தரம் என்பவரின் தாத்தா தர்மகத்தாவாக 3 தலைமுறையாக கோவிலில் படைக்கலம் எடுத்து பூஜை செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் கோவில் நிகழ்ச்சியை கவனிக்க முடியவில்லை. அப்போது ஊரைச் சேர்ந்த அம்மாசை என்பவர் கவனித்து வந்தார். தற்போது அம்மாசை கோவில் திருவிழாவை தன்னிச்சையாக நடத்த முயற்சித்து வருகிறார்.



தற்போது 3 தலைமுறையாக கோவிலில் பூஜை செய்து வந்தவர்கள் தட்டி கேட்டதற்கு அவர்களையும் அவருக்களுக்கு ஆதரவாக இருந்த 10 குடும்பத்தினரையும் அம்மாசை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்கவிட்டால் ஓட்டு அட்டையை திரும்ப தர போதவாக தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...