குருக்கம்பாளையத்தில் 10 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு - பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் மனு

அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குருக்கம்பாளைய ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் குருக்கம்பாளையத்தில் ஸ்ரீ பட்டாசு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஊர் மக்கள் அனைவரும் வழிபாட்டு வருகின்றனர். இந்நிலையில் சுந்தரம் என்பவரின் தாத்தா தர்மகத்தாவாக 3 தலைமுறையாக கோவிலில் படைக்கலம் எடுத்து பூஜை செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் கோவில் நிகழ்ச்சியை கவனிக்க முடியவில்லை. அப்போது ஊரைச் சேர்ந்த அம்மாசை என்பவர் கவனித்து வந்தார். தற்போது அம்மாசை கோவில் திருவிழாவை தன்னிச்சையாக நடத்த முயற்சித்து வருகிறார்.



தற்போது 3 தலைமுறையாக கோவிலில் பூஜை செய்து வந்தவர்கள் தட்டி கேட்டதற்கு அவர்களையும் அவருக்களுக்கு ஆதரவாக இருந்த 10 குடும்பத்தினரையும் அம்மாசை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் அமைதியாக இருந்து வரும் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை செய்து வரும் அம்மாசை, குப்பன், மாகாளி, முத்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்கவிட்டால் ஓட்டு அட்டையை திரும்ப தர போதவாக தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...