கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1337 மையங்களும், நகர்ப்புறங்களில் 244 மையங்களும் என 1581 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 5 வயதிற்கு உட்பட்ட 3.33 லட்சம் குழந்தைகள் பயன்பெறவுள்ளனர்.
வெளி மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 1357 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 34 மையங்கள் மற்றும் 20 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத் துறை அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6324 பணியாளர்கள் பணியாற்றவுள்ளார். இப்பணிகளை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
எனவே, அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான ஏப்ரல் 2 அன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்கலாம். இதன் இரண்டாம் தவணையாக ஏப்ரல் 30 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 1357 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 34 மையங்கள் மற்றும் 20 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத் துறை அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6324 பணியாளர்கள் பணியாற்றவுள்ளார். இப்பணிகளை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
எனவே, அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான ஏப்ரல் 2 அன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்கலாம். இதன் இரண்டாம் தவணையாக ஏப்ரல் 30 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.