கோவை கலெக்டரிடம் குறைகளை தெரிவிக்க வருபவர்களுக்கு மனு எழுத இனிமேல் இலவசம்

மனுக்கள் எழுத தெரியாத மக்களுக்கு மனுக்களை எழுதி தருவதற்கு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாரந்தோறும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து இலவசமாக எழுதி தருகின்றனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களது மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிப்பர்.



இவ்வாறு மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான மக்கள் எவ்வாறு மனு எழுதுவது என தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு மனுக்களை எழுதி தருவதற்கு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாரந்தோறும் வருகை தந்து இலவசமாக எழுதி தருகின்றனர்.

இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனுக்களை எழுதி தருவதால் பெரும்பாலான மக்களுக்கு அது தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் பணம் கொடுத்து மனுக்களை எழுதி செல்கின்றனர்.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் இருப்பவர்கள் மனுக்கள் எழுதுவதற்கு அதிகமான பணம் கேட்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்து வந்தன.



இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இன்று (மார்ச்.11) முதல் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் தன்னார்வலர்கள் (நேரு யுவ கேந்திரா - கோயம்புத்தூர்) மற்றும் கல்லூரி மாணவர்களை அமர்த்தி இலவசமாக பொதுமக்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.



இதனால் பொதுமக்கள் பலரும் இலவசமாக மனுக்களை எழுதி செல்கின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...