தார் சாலை அமைக்கக்கோரி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தார் சாலை போடாமல் இருப்பதால் மழைக்காலங்களில் முற்றிலுமாக சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக ஜமீன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.எம்.ஜி, எம்.எஸ், எம்.எம், காலனியில் 48 வீடுகள் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.



நிதி ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை தார் சாலை போடாமல் இருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தார் சாலை போடாமல் இருப்பதால் அன்றாடம் அவ்வழியாக பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், இரவு நேரத்தில் அவ்வழியாக செல்ல அச்சமாக இருப்தாகவும், மழைக்காலங்களில் முற்றிலும் இந்த சாலையை பயன்படுத்தும் முடியாத நிலை இருப்பதால் உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முற்றுகையிட்டு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...