தார் சாலை அமைக்கக்கோரி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தார் சாலை போடாமல் இருப்பதால் மழைக்காலங்களில் முற்றிலுமாக சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக ஜமீன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.எம்.ஜி, எம்.எஸ், எம்.எம், காலனியில் 48 வீடுகள் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.



நிதி ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை தார் சாலை போடாமல் இருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தார் சாலை போடாமல் இருப்பதால் அன்றாடம் அவ்வழியாக பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், இரவு நேரத்தில் அவ்வழியாக செல்ல அச்சமாக இருப்தாகவும், மழைக்காலங்களில் முற்றிலும் இந்த சாலையை பயன்படுத்தும் முடியாத நிலை இருப்பதால் உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முற்றுகையிட்டு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...