குண்டடத்தில் 334 பயனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று முடிந்தவரை அதற்கான தீர்வு அந்தந்த இடங்களில் செய்து கொடுப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரூபாய் ஆர்.வி.எல் திருமண மண்டபத்தில் கலைஞர் மக்கள் சேவை முகாம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கலந்து கொண்டார். மேலும் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மக்கள் சேவை முகாமில் தேர்வு செய்யப்பட்ட 334 பயனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு அரசு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு உடனடியாக கொண்டு சேர்ப்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட போன நபர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை காண விண்ணப்பம் ஆகிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், மேலும் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று முடிந்தவரை அதற்கான தீர்வு அந்தந்த இடங்களில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.



மேலும் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சியில் 1024 மனுக்கள் பெறப்பட்டு 538 மனுக்களுக்கு முகாம் முடிவில் அன்றே தீர்வு இயற்றப்பட்டது. மேலும் செங்கோடம்பாளையம் ஊராட்சியில் 643 மனுக்கள் பெறப்பட்டு 205 பயனாளிகளுக்கு முகாம் மூலம் தீர்வு காணப்பட்டது. தற்போது 99பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து 25 பயனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும், 75 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளையும், 219 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள், ஐந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.



10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் என மொத்தம் 334 பயனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...