தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

பெண்கள் பணிபுரியும் இடத்திலும் வீட்டிலும் தன் பங்கை சிறப்பாக செயல்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று நீதிபதி தர்ம பிரபு கூறினார்.


திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து மகளிர் தின விழா தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கி பேசினர்.

இவர் பேசும் போது மகளிர் எல்லா துறைகளிலும் முன்னேறி வருவது போற்றக்கூடியது. மேலும் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணின் பங்கு உறியது பெண்மையை போற்றுவோம் என்றார்.

மேலும் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு பேசுகையில், பெண்கள் பணிபுரியும் இடத்திலும் வீட்டிலும் தன் பங்கை சிறப்பாக செயல்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று கூறினார். இதில் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செல்வன், செயலாளர் ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.கார்வேந்தன், ராமசாமி, தங்கராஜ், மணிவண்ணன், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினர்.



விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று மற்றும் கலந்து கொண்ட மகளிருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வட்ட சட்டப் பணிகள் குழுவில் சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு உறுதுணையாக செயல்பட்ட வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.



சுமார் பெண் ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



மேலும் தாராபுரம் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...