தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

பெண்கள் பணிபுரியும் இடத்திலும் வீட்டிலும் தன் பங்கை சிறப்பாக செயல்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று நீதிபதி தர்ம பிரபு கூறினார்.


திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து மகளிர் தின விழா தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கி பேசினர்.

இவர் பேசும் போது மகளிர் எல்லா துறைகளிலும் முன்னேறி வருவது போற்றக்கூடியது. மேலும் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணின் பங்கு உறியது பெண்மையை போற்றுவோம் என்றார்.

மேலும் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு பேசுகையில், பெண்கள் பணிபுரியும் இடத்திலும் வீட்டிலும் தன் பங்கை சிறப்பாக செயல்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று கூறினார். இதில் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செல்வன், செயலாளர் ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.கார்வேந்தன், ராமசாமி, தங்கராஜ், மணிவண்ணன், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினர்.



விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று மற்றும் கலந்து கொண்ட மகளிருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வட்ட சட்டப் பணிகள் குழுவில் சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு உறுதுணையாக செயல்பட்ட வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.



சுமார் பெண் ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



மேலும் தாராபுரம் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...