உடுமலை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தில்லை நகரில் நூறாண்டு பழமை வாய்ந் அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதல் காலயாம பூஜையும், அதைத் தொடர்ந்து இரண்டாம் காலயாம பூஜையும், மூன்றாம், நான்காம் காலயாம பூஜையும் நடைபெற்றது.

முதலாம் காலயாம பூஜையில் வெள்ளி அலங்காரமும், இரண்டாம் காலயாம பூஜையில் சந்தன அலங்காரமும், மூன்றாம் காலயாம பூஜையில் விபூதி அலங்காரமும், நான்காம் காலயாம பூஜையில் குங்கும அலங்காரமும் சுவாமிக்கு செய்யப்பட்டது.

ஒவ்வொரு காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது.

மேலும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான ஒவ்வொரு அபிஷேக பொருட்களும் சுவாமிக்கு தனித்தனியாக படைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு காலயாம பூஜையின் போதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ரத்தின லிங்கேஸ்வரர் சுவாமியை வழிபாடு செய்தனர். பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சுவாமியை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக தேவராட்டம், பரதநாட்டியம், ஆடல்பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...