உடுமலை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தில்லை நகரில் நூறாண்டு பழமை வாய்ந் அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதல் காலயாம பூஜையும், அதைத் தொடர்ந்து இரண்டாம் காலயாம பூஜையும், மூன்றாம், நான்காம் காலயாம பூஜையும் நடைபெற்றது.

முதலாம் காலயாம பூஜையில் வெள்ளி அலங்காரமும், இரண்டாம் காலயாம பூஜையில் சந்தன அலங்காரமும், மூன்றாம் காலயாம பூஜையில் விபூதி அலங்காரமும், நான்காம் காலயாம பூஜையில் குங்கும அலங்காரமும் சுவாமிக்கு செய்யப்பட்டது.

ஒவ்வொரு காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது.

மேலும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான ஒவ்வொரு அபிஷேக பொருட்களும் சுவாமிக்கு தனித்தனியாக படைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு காலயாம பூஜையின் போதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ரத்தின லிங்கேஸ்வரர் சுவாமியை வழிபாடு செய்தனர். பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சுவாமியை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக தேவராட்டம், பரதநாட்டியம், ஆடல்பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...