உடுமலை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தில்லை நகரில் நூறாண்டு பழமை வாய்ந் அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதல் காலயாம பூஜையும், அதைத் தொடர்ந்து இரண்டாம் காலயாம பூஜையும், மூன்றாம், நான்காம் காலயாம பூஜையும் நடைபெற்றது.

முதலாம் காலயாம பூஜையில் வெள்ளி அலங்காரமும், இரண்டாம் காலயாம பூஜையில் சந்தன அலங்காரமும், மூன்றாம் காலயாம பூஜையில் விபூதி அலங்காரமும், நான்காம் காலயாம பூஜையில் குங்கும அலங்காரமும் சுவாமிக்கு செய்யப்பட்டது.

ஒவ்வொரு காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது.

மேலும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான ஒவ்வொரு அபிஷேக பொருட்களும் சுவாமிக்கு தனித்தனியாக படைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு காலயாம பூஜையின் போதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ரத்தின லிங்கேஸ்வரர் சுவாமியை வழிபாடு செய்தனர். பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சுவாமியை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக தேவராட்டம், பரதநாட்டியம், ஆடல்பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...