மீண்டும் பாஜக ஆட்சி அமைய பொதுமக்கள் விருப்பம் - திருப்பூரில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் பேட்டி

பல்லடத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட தலைவர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான செந்தில்வேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி சிறப்பான முறையில் இருந்ததாகவும், மீண்டும் அதே ஆட்சி அமைய வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாகவும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகள் பாஜகவின் தேசிய தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு கட்சியின் மத்திய தலைமைக்கு அனுப்ப இருப்பதாகவும், மேலும் 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளையும் கிராமங்கள் தோறும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்பு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும், தினந்தோறும் கட்சியினர் இணைந்து வரக்கூடிய நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் விரைவில் மிகப்பெரிய இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...