கோவையில் வரும் 10ஆம் தேதி தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி - மாவட்ட ஆட்சியர் தகவல்

கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (மார்ச்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி என்ற தலைப்பில், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சரின் திட்டங்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், வருகின்ற அன்று (10.03.2024) ஒருவாரத்திற்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில், தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மக்களுடன் முதல்வர், மக்களை தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், இக்கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியினை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வருகின்ற (10.03.2023) அன்று மாலை 6மணிக்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தொடங்கிவைத்து பார்வையிட உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த இப்புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...