கோவை விமான நிலையத்தை சுத்தம் செய்யும் நவீன ஸ்கூட்டர்கள்

விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு இதற்காக 2 நவீன ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் நவீன ஸ்கூட்டர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை விமான நிலையம் திகழ்கிறது. இங்கு இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும் இடையே 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.

கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க கோவை விமான நிலையத்தை தூய்மையாக வைக்கவும் விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் உத்தரவின் பேரில் விமான நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தரையில் கிடக்கும் குப்பை மற்றும் மண்ணை அகற்றும் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள அலங்கார கண்ணாடி உள்ளிட்ட உயரமான இடங்களை சுத்தம் செய்ய நவீன ஹைட்ராலிக் பேட்டரி வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தை தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிக்காக சாலையில் இயக்கும் பேட்டரி ஸ்கூட்டர் போன்று 2 நவீன ஸ்கூட்டர் வாகனங்கள் அண்மையில் வாங்கப்பட்டு உள்ளன. அந்த வாகனங்களில் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் சுத்தம் செய்யும் மாப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டு ஸ்கூட்டர் வாகனத்தை இயக்கி சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நேற்று முன்தினம் (மார்ச்.6) முதல் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் விமான நிலையத்தின் சுத்தம், சுகாதாரம் மிகவும் முக்கியம். எனவே விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு இதற்காக 2 நவீன ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் மாலை நேரத்தில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த புகை அடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...