கோவை விமான நிலையத்தை சுத்தம் செய்யும் நவீன ஸ்கூட்டர்கள்

விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு இதற்காக 2 நவீன ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் நவீன ஸ்கூட்டர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை விமான நிலையம் திகழ்கிறது. இங்கு இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும் இடையே 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.

கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க கோவை விமான நிலையத்தை தூய்மையாக வைக்கவும் விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் உத்தரவின் பேரில் விமான நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தரையில் கிடக்கும் குப்பை மற்றும் மண்ணை அகற்றும் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள அலங்கார கண்ணாடி உள்ளிட்ட உயரமான இடங்களை சுத்தம் செய்ய நவீன ஹைட்ராலிக் பேட்டரி வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தை தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிக்காக சாலையில் இயக்கும் பேட்டரி ஸ்கூட்டர் போன்று 2 நவீன ஸ்கூட்டர் வாகனங்கள் அண்மையில் வாங்கப்பட்டு உள்ளன. அந்த வாகனங்களில் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் சுத்தம் செய்யும் மாப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டு ஸ்கூட்டர் வாகனத்தை இயக்கி சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நேற்று முன்தினம் (மார்ச்.6) முதல் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் விமான நிலையத்தின் சுத்தம், சுகாதாரம் மிகவும் முக்கியம். எனவே விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு இதற்காக 2 நவீன ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் மாலை நேரத்தில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த புகை அடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...