கோவை கவுமார மடத்தின் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு

அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து, கவுமார மடாலயத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கையை 8 வாரங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கோவை: சென்னை ஐகோர்ட்டில், கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த சிவ பக்தரான சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தை ராமுக்குட்டி என்பவர் நிறுவினார்.

இவர், சரவணம்பட்டியில் தனக்கு சொந்தமாக உள்ள 9.54 ஏக்கர் நிலத்தை தானமாக எழுதி வைத்தார். அதில் இருந்து வரும் வருமானத்தை மடாலயத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலத்தின் ஒரு பகுதியை ரத்தினம் உள்ளிட்ட சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த புகார் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.



இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர், அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கையை 8 வாரங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...