மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தாராபுரம் மூலனூர், கன்னிவாடி, வெள்ளகோவில், புதுப்பை, முத்தூர், காங்கேயம், கரூர், சின்னதாராபுரம் உட்பட 100க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூரில் பிரசித்தி பெற்ற வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேர் திருவிழா மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 42 வது தேரோட்ட திருவிழா விநாயகர் வழிபாடு, முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது.

நேற்றிரவு நடைபெற்ற தேரோட்டத்திற்கு கோவில் முதன்மையாளர்கள் ராமநாதன், ராமசாமி ஆகியோர் முறைப்படி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் விநாயகர் வழிபாட்டுடன் லட்சார்ச்சனை நடைபெற்றது. கலச பூஜை, வேள்வியுடன் இரவு லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. திருக்கல்யாணம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு திருத்தேர் எழுந்தருளல் நடை பெற்றது.



இரவு திருத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தாராபுரம் மூலனூர், கன்னிவாடி, போளரை, வெள்ளகோவில், புதுப்பை, முத்தூர், காங்கேயம் கரூர் சின்னதாராபுரம், உள்ளிட்ட100 மேற்பட்ட பகுதிகளிலிருந்து 1000, பேர்களுக்கு மேல் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், திமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் விழாவில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை விழாவின் நிறைவாக தீர்த்தக் காவடி செலுத்துதலும் மற்றும் அக்கினி கம்பம் கிணற்றில் விடுதலும், கொடி இறக்கம், மஞ்சள் நீர், மறு அபி ஷேகம் தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் கோவில் குலத்தவர் செய்து செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...