பிரதமர் மோடியை கண்டித்து பொள்ளாச்சி அருகே ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன போராட்டம்

கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு என்று அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வாக்குறுதி அளித்ததை இதுவரை செயல்படுத்தாமல் வெறும் வாயில் வடை சுட்டதாக கூறி பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு வடை வழங்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.



பிரதமர் மோடியை கண்டித்து பதாதைகள் ஏந்தியபடி பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன முறையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கவிதா, பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கவேல், துணைச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...