பிரதமர் மோடியை கண்டித்து பொள்ளாச்சி அருகே ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன போராட்டம்

கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு என்று அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வாக்குறுதி அளித்ததை இதுவரை செயல்படுத்தாமல் வெறும் வாயில் வடை சுட்டதாக கூறி பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு வடை வழங்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.



பிரதமர் மோடியை கண்டித்து பதாதைகள் ஏந்தியபடி பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன முறையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கவிதா, பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கவேல், துணைச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...