பிரதமர் மோடியை கண்டித்து பொள்ளாச்சி அருகே ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன போராட்டம்

கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு என்று அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வாக்குறுதி அளித்ததை இதுவரை செயல்படுத்தாமல் வெறும் வாயில் வடை சுட்டதாக கூறி பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு வடை வழங்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.



பிரதமர் மோடியை கண்டித்து பதாதைகள் ஏந்தியபடி பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன முறையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கவிதா, பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கவேல், துணைச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...