பிரதமர் மோடியை கண்டித்து பொள்ளாச்சி அருகே ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன போராட்டம்

கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு என்று அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வாக்குறுதி அளித்ததை இதுவரை செயல்படுத்தாமல் வெறும் வாயில் வடை சுட்டதாக கூறி பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு வடை வழங்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.



பிரதமர் மோடியை கண்டித்து பதாதைகள் ஏந்தியபடி பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன முறையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கவிதா, பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கவேல், துணைச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...