சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த பல்லடம் மாணவர்கள்

சூரத்தில் "Indian Powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு விக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும், ரித்திக் தங்கப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்வேல்-தேவி தம்பதியினரின் மகன் ரித்திக். மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகன் விக்னேஷ். ரித்திக் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். விக்னேஷ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் "Indian Powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் 59 கிலோ எடை பளு தூக்கும் போட்டியில் விக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும், 83 கிலோ எடைகளான பளு தூக்கும் போட்டியில் ரித்திக் தங்கப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர்.



போட்டி முடிவுற்ற பின் நேற்று பல்லடம் வந்தடைந்த இருவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விக்னேஷின் தந்தை திருப்பூரில் டெய்லராக பணியாற்றி வரும் நிலையில், பயிற்சிக்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாகவும், ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பல் தூக்கும் போட்டியில் பங்கேற்க நிதி பற்றாக்குறை உள்ளதாகவும், அதேபோன்று யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் ரித்திக் தனது தந்தையை இழந்து தனது தாயின் வருமானத்தில் கூடுதலாக பளு தூக்கும் பயிற்சி பெற்று தேசிய அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ளதாகவும், தமிழக அரசு தங்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச போட்டியில் பங்கேற்க இருவருக்கும் உதவ வேண்டும் என விக்னேஷ் மற்றும் ரித்திக் ஆகியோரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...