சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த பல்லடம் மாணவர்கள்

சூரத்தில் "Indian Powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு விக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும், ரித்திக் தங்கப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்வேல்-தேவி தம்பதியினரின் மகன் ரித்திக். மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகன் விக்னேஷ். ரித்திக் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். விக்னேஷ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் "Indian Powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் 59 கிலோ எடை பளு தூக்கும் போட்டியில் விக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும், 83 கிலோ எடைகளான பளு தூக்கும் போட்டியில் ரித்திக் தங்கப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர்.



போட்டி முடிவுற்ற பின் நேற்று பல்லடம் வந்தடைந்த இருவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விக்னேஷின் தந்தை திருப்பூரில் டெய்லராக பணியாற்றி வரும் நிலையில், பயிற்சிக்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாகவும், ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பல் தூக்கும் போட்டியில் பங்கேற்க நிதி பற்றாக்குறை உள்ளதாகவும், அதேபோன்று யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் ரித்திக் தனது தந்தையை இழந்து தனது தாயின் வருமானத்தில் கூடுதலாக பளு தூக்கும் பயிற்சி பெற்று தேசிய அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ளதாகவும், தமிழக அரசு தங்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச போட்டியில் பங்கேற்க இருவருக்கும் உதவ வேண்டும் என விக்னேஷ் மற்றும் ரித்திக் ஆகியோரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...