இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு கணினி வழங்கும் விழா - மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றி

கிராமப்புற மாணவர்களிடையே கணினி வழி கற்பித்தலை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளிக்கு கணினி வழங்கிய வாட்சன் நிறுவனத்துக்கும், பரிந்துரை செய்த உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்திற்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில், பெரிய குமாரபாளையம், வாட்சன் இன்பிரா தனியார் நிறுவனம் மூலம் கணினி வழங்கும் விழா இன்று 6.3.2024 நடைபெற்றது.



நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்று பேசினார். அப்போது கிராமப்புற மாணவர்களிடையே நூலகப் பழக்கத்தை வளர்ப்பதற்காக உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் உடுமலையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நூலகம் வழங்கி உள்ளதை குறிப்பிட்டு பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்.

நிகழ்வில் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கணேஷ்குமார், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த வாட்சன் தனியார் நிறுவனத்தின் மேலாளர் பிரபாகரன் மற்றும் முதுநிலை அலுவலர் பாஸ்கர் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் லோகேஸ்வரி கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கணினி வழி கற்பித்தலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் பரிந்துரையின் பேரில், இன்று வழங்கப்பட்டுள்ள இந்த கணினியை பயன்படுத்தி பள்ளியில் கற்றல் கற்பித்தலை சிறப்பாக மேற்கொண்டு, மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும் என பள்ளி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

கிராமப்புற மாணவர்களிடையே கணினி வழி கற்பித்தலை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளிக்கு கணினி வழங்கிய வாட்சன் நிறுவனத்துக்கும், பரிந்துரை செய்த உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்திற்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...