சொலவம்பாளையம் பகுதியில் உள்ள பால்கொள்முதல் நிலையத்தில் ரூ.6.40லட்சம் செலவில் சுற்றுசுவர் கட்டும் பணி-MLA தாமோதரன் தொடங்கி வைப்பு

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சுற்று சுவர் கட்டுவதற்கான பணியை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் இன்று மார்ச் 6ம் தேதி தொடங்கி வைத்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள பால் கொள்முதல் நிலையத்தில் சுற்று சுவர் கட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று சுவர் கட்டுவதற்கான பணியை தொடங்க பூமி பூஜை இன்று மார்ச் 6ம் தேதி 11 மணிக்கு நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இன்று தொடங்கபட்ட பணிகள் மூன்று மாதங்களில் முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூமி பூஜையில் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகன், சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ராசு என்கிற செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ எட்டிமடைசண்முகம், மதுக்கரை நகர அதிமுக செயலாளர் சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...