சொலவம்பாளையம் பகுதியில் உள்ள பால்கொள்முதல் நிலையத்தில் ரூ.6.40லட்சம் செலவில் சுற்றுசுவர் கட்டும் பணி-MLA தாமோதரன் தொடங்கி வைப்பு

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சுற்று சுவர் கட்டுவதற்கான பணியை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் இன்று மார்ச் 6ம் தேதி தொடங்கி வைத்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள பால் கொள்முதல் நிலையத்தில் சுற்று சுவர் கட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று சுவர் கட்டுவதற்கான பணியை தொடங்க பூமி பூஜை இன்று மார்ச் 6ம் தேதி 11 மணிக்கு நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இன்று தொடங்கபட்ட பணிகள் மூன்று மாதங்களில் முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூமி பூஜையில் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகன், சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ராசு என்கிற செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ எட்டிமடைசண்முகம், மதுக்கரை நகர அதிமுக செயலாளர் சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...