சுண்டக்காமுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதி, சுண்டக்காமுத்தூரில், மாவட்ட வர்த்தக அணி சார்பாக சுண்டக்காமுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவை வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் A.K.வேலுச்சாமி ஏற்பாட்டில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை நேற்று (மார்ச்.5) கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

கோவை, R.S.புரம் பகுதி கழகத்தில், பகுதி கழக செயலாளர் கார்த்திக்.K.செல்வராஜ் ஏற்பாட்டில் R.S. புரம் மாநகராட்சி ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்தில் மதிய உணவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை நேற்று (மார்ச்.5) பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி ஆகியோர் இணைந்து வழங்கினர்.



உடன் பகுதி கழக செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஜெயந்தி மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...