நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை – கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் பேசியாதவது, கோவை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் இன்று 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1178 பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவு வரும் போது பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

குடிநீருக்காக சாலைகள் தோண்டப்படும் நிலையில் அதை சரி செய்வதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்த பணிகளும் துவக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் இதே போன்று பணிகள் நடைபெறுகிறது.

கோவை மாநிலத்தில் மிக அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அரசியல் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடைகாலத்தில் வரும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அணைகளில் தண்ணீர் குறைகிற போது மாற்று ஏற்பாடு செய்யப்படுவது என்பது அதில் பல சிக்கல்கள் இருக்கிறது. வேறு இடத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் போது எதிர்ப்பு வருகிறது. இருந்தாலும் மக்களுக்கு குடிநீர் தருவது அத்தியாவசியம் என்ற காரணத்தால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.



பிரதமர் மோடி கொடுக்கிறேன் என்பதை கொடுத்தால் பொதுமக்கள் நம்புவார்கள். அதை இன்னும் தரவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளை இங்கே வந்து பேசுவது பிரதம அமைச்சர் அளவில் இதுபோன்று நாம் பார்த்ததில்லை.

எத்தனையோ பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு மாநில கட்சியை ஒரு கட்சியின் தலைவரை இவ்வாறு நேரடியாக வந்து இல்லாத குற்றச்சாட்டுகளை அவ்வளவு நாகரிகமானது அல்ல.

அவர் பிரதமராக இருப்பதால் இதற்கு மேல் நாங்கள் கூறுவதும் நாகரீகம் அல்ல. பிரதமர் மோடி அதை அவ்வளவு பெரிய அரசியல் மேடையாக வைத்துக் கொண்டு பேசியிருக்கக் கூடாது- திமுக கொள்ளை அடித்த பணத்தை மக்களிடத்திலேயே ஒப்படைப்போம் என நேற்று பிரதமர் பேசியது தொடர்பாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வருவது நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பாதிப்புகளை எல்லாம் எதிர்நோக்கி தான் திமுக இருக்கிறது. திமுக எதற்கும் சலித்து போனது இல்லை.

மக்களுக்கு கடுமையாக கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்திருக்கிறார் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.

வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டங்களை முதல்வர் தந்திருக்கிறார்.

இதற்கு மேல் வேறு யாரானும் செய்திருக்கிறார்கள் அல்லது அருகில் உள்ள மாநிலங்களில் செய்திருக்கிறார்கள் என்றால் சொல்லட்டும். மக்களே சொல்லட்டும். கோவையில் திமுக போட்டியிட வேண்டும் என திமுகவினர் விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு, தோழமைக் கட்சிகளுடன் தலைமை பேசி வருகிறது. தோழமைக் கட்சிகளின் மற்றும் எங்கள் தலைமை சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை உண்டு. அதற்காக கூட்டணியில் சென்றால் உடன்பாட்டில் செல்வது அவ்வாறு சென்றால் 100% இன்று வெற்றி பெறச் செய்ய உழைப்பாளர்கள்.

தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை நாங்கள் அமல்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...