நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை – கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் பேசியாதவது, கோவை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் இன்று 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1178 பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவு வரும் போது பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

குடிநீருக்காக சாலைகள் தோண்டப்படும் நிலையில் அதை சரி செய்வதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்த பணிகளும் துவக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் இதே போன்று பணிகள் நடைபெறுகிறது.

கோவை மாநிலத்தில் மிக அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அரசியல் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடைகாலத்தில் வரும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அணைகளில் தண்ணீர் குறைகிற போது மாற்று ஏற்பாடு செய்யப்படுவது என்பது அதில் பல சிக்கல்கள் இருக்கிறது. வேறு இடத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் போது எதிர்ப்பு வருகிறது. இருந்தாலும் மக்களுக்கு குடிநீர் தருவது அத்தியாவசியம் என்ற காரணத்தால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.



பிரதமர் மோடி கொடுக்கிறேன் என்பதை கொடுத்தால் பொதுமக்கள் நம்புவார்கள். அதை இன்னும் தரவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளை இங்கே வந்து பேசுவது பிரதம அமைச்சர் அளவில் இதுபோன்று நாம் பார்த்ததில்லை.

எத்தனையோ பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு மாநில கட்சியை ஒரு கட்சியின் தலைவரை இவ்வாறு நேரடியாக வந்து இல்லாத குற்றச்சாட்டுகளை அவ்வளவு நாகரிகமானது அல்ல.

அவர் பிரதமராக இருப்பதால் இதற்கு மேல் நாங்கள் கூறுவதும் நாகரீகம் அல்ல. பிரதமர் மோடி அதை அவ்வளவு பெரிய அரசியல் மேடையாக வைத்துக் கொண்டு பேசியிருக்கக் கூடாது- திமுக கொள்ளை அடித்த பணத்தை மக்களிடத்திலேயே ஒப்படைப்போம் என நேற்று பிரதமர் பேசியது தொடர்பாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வருவது நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பாதிப்புகளை எல்லாம் எதிர்நோக்கி தான் திமுக இருக்கிறது. திமுக எதற்கும் சலித்து போனது இல்லை.

மக்களுக்கு கடுமையாக கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்திருக்கிறார் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.

வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டங்களை முதல்வர் தந்திருக்கிறார்.

இதற்கு மேல் வேறு யாரானும் செய்திருக்கிறார்கள் அல்லது அருகில் உள்ள மாநிலங்களில் செய்திருக்கிறார்கள் என்றால் சொல்லட்டும். மக்களே சொல்லட்டும். கோவையில் திமுக போட்டியிட வேண்டும் என திமுகவினர் விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு, தோழமைக் கட்சிகளுடன் தலைமை பேசி வருகிறது. தோழமைக் கட்சிகளின் மற்றும் எங்கள் தலைமை சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை உண்டு. அதற்காக கூட்டணியில் சென்றால் உடன்பாட்டில் செல்வது அவ்வாறு சென்றால் 100% இன்று வெற்றி பெறச் செய்ய உழைப்பாளர்கள்.

தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை நாங்கள் அமல்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...