உடுமலையில் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்கும் விழா- அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தொகுப்பு வீடு பராமரிப்பு செய்ய வேண்டும் என்று மாநிலம் முழுவதும் கோரிக்கை எழுந்தது அடிப்படையில், விரைவில் பராமரிப்பு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவைச் சேர்ந்த 468 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா நடந்தது.

திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசுகையில், "நீண்ட காலமாக மலைவாழ் கிராம மக்களுக்கு பட்டா கிடைக்காமல் போராடி வந்தனர். தற்போது, உடுமலை தாலுகாவுக்குட்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு படிப்படியாக பட்டா வழங்கப்படுகிறது. கிராமத்துக்கு ரோடு வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதே போல் தொகுப்பு வீடு பராமரிப்புக்காக மாநிலம் முழுவதும் கோரிக்கை எழுந்தது அடிப்படையில், விரைவில், பராமரிப்பு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்றார்.



செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பட்டா வழங்கும் திட்டத்துக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பயன்பெற உள்ளனர் என்றார்.

விழாவில், திருமூர்த்தி மலை கோடந்தூர், குருமலை, குளிப்பட்டி உட்பட பத்துக்கு மேற்பட்ட மலைவாழ் கிராமத்தை சேர்ந்த, 84 பயனாளிகளுக்கு வன உரிமை பட்டாவும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 468 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவும், முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டை, 653 பேருக்கும் வழங்கப்பட்டது.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...