கோவை மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-20, 27, 32 ஆகியவற்றில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024 கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை இன்று (மார்ச்.4) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு 2024-க்கு பயிற்சி வகுப்புகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-03 மற்றும் 33-ல் ரூ-52.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக கழிப்பறையை பொதுமக்ள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.22.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படித்துறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார். மேலும் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

உடன் மாவட்ட கழகச் செயலாளர் தொ.இரவி தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர் கல்யாணசுந்தரம், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...