தாராபுரத்தில் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேனர் கிழிப்பு

அண்ணா சிலை பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். பேனரில் முதலமைச்சரின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படத்தையும் மர்ம நபர்கள் கிழித்து விட்டு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க‌.ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது சம்பவம் திமுக கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 71, ஆவது பிறந்தநாள் விழா நேற்று திமுக நகரச் செயலாளர் முருகானந்தன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலையில் அண்ணா சிலை பகுதியில் நேற்று மாலை 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.



இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கே.எஸ்.தனசேகர் ஆதரவாளர்கள் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படம் அடங்கிய பேனரையும் கிழித்து விட்டு சென்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நிர்வாகிகளின் உட்கட்சி பூசல் அக்கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில் திமுக நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் கலையரசனிடம் பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50,க்கு மேற்பட்ட திமுகவினர் மனு கொடுத்தனர். இதனால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் முன்னாள் நகர செயலாளரும், தற்போதைய தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.எஸ்.தனசேகர் ஒரு அணியினராகவும், தற்போதைய தாராபுரம் நகர செயலாளராக இருந்து வரும் முருகானந்தம் மற்றொரு அணியாகவும். இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு கடந்த 7 மாத காலமாக கருத்து வேறுபாடுடன் கட்சிப் பணிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...