தாராபுரத்தில் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேனர் கிழிப்பு

அண்ணா சிலை பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். பேனரில் முதலமைச்சரின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படத்தையும் மர்ம நபர்கள் கிழித்து விட்டு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க‌.ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது சம்பவம் திமுக கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 71, ஆவது பிறந்தநாள் விழா நேற்று திமுக நகரச் செயலாளர் முருகானந்தன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலையில் அண்ணா சிலை பகுதியில் நேற்று மாலை 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.



இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கே.எஸ்.தனசேகர் ஆதரவாளர்கள் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படம் அடங்கிய பேனரையும் கிழித்து விட்டு சென்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நிர்வாகிகளின் உட்கட்சி பூசல் அக்கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில் திமுக நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் கலையரசனிடம் பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50,க்கு மேற்பட்ட திமுகவினர் மனு கொடுத்தனர். இதனால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் முன்னாள் நகர செயலாளரும், தற்போதைய தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.எஸ்.தனசேகர் ஒரு அணியினராகவும், தற்போதைய தாராபுரம் நகர செயலாளராக இருந்து வரும் முருகானந்தம் மற்றொரு அணியாகவும். இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு கடந்த 7 மாத காலமாக கருத்து வேறுபாடுடன் கட்சிப் பணிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...