பிரதமர் மோடி வாயில் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு வடை வழங்கி திமுக நூதன பிரச்சாரம்

பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம்ரூபாய் போடுவேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவேன் என கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிரதமர் மோடி பின்னர் எதையும் செயல்படுத்தாமல் வாயில் வெறும் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உளுந்து வடையை குவித்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி பிரதமர் மோடி சொன்ன திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...