உடுமலை அருகே திருமூர்த்தி மலை அடிவாரத்தில் பொன்னாலம்மன் கோவில் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னாலம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய திருமூர்த்தி மலை பகுதியில் பொன்னாலம்மன் சோலை உள்ளது. தளி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தோட்டத்து சாலைகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் மலை அடிவாரப் பகுதியில் பொன்னாலம்மனுக்கு கோவில் எழுப்பி காலம் காலமாக வழிபாடு வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. கோவிலில் பொன்னாலம்மன் பரிவார கடவுள்களான விநாயகர், முருகன், சப்த கன்னிகள், கருப்பராயனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.



கோவிலில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வேள்வியும் பொன்னாலம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.



இதையடுத்து பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெங்கிடுசாமி, தண்டபாணி, ஈஸ்வரசாமி, தேவராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...