ஓய்வு பெறும் கடைசி நாளில் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு செய்யப்பட்டதை அடுத்து அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது தற்போது வரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடத்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர் ஹரிஹரன் வயது 60. இவர் காங்கேயத்திற்கு பணிக்கு வருவதற்கு முன்னர் குண்டடம் யூனியனில் கடந்த 2022-2023ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்பொழுது தாராபுரம் தாலுக்கா, குண்டடம் யூனியனின் அம்மா சிமெண்ட் விநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகாரின் பேரில் கடந்த 2023 மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் மேற்கொண்ட ஆய்வில் ஹரிஹரன் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு செய்யப்பட்டதை அடுத்து அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது தற்போது வரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடத்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் ஓய்வு பெற இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்று காங்கேயத்திலும் சிவன்மலை, வீரணம்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டாக எழுந்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் மட்டும் சிக்குகின்றனர் என்று பார்த்தால் காங்கேயம் வட்டார வளர்ச்சி அதிகாரியும் ஒய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் ஆனது வேடிக்கையாக இருக்கிறது.

அலுவலக மீட்டிங், கிராமசபை கூட்டங்களில் இதே பிடிஓ பேசும் போது அரசு ஊழியர்கள் என்ற மமதையில் இவருக்கு கீழே உள்ள அதிகாரிகளை இவர் வசைபாடிய வீடியோக்கள் கடந்த ஆண்டு சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...