கோவை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (மார்ச் 3) நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கோயில்கள், டோல்கேட், பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1088 கிராமப்புற மையங்கள், 497 நகா்ப்புற மையங்கள் என மொத்தம் 1,585 மையங்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து நாளை (மார்ச் 3) வழங்கப்படவுள்ளது.

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இம்முகாம்களுக்குத் தேவையான சொட்டு மருந்து அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. இப்பணியில் சுகாதாரத் துறையினா், அங்கன்வாடிப் பணியாளா்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா், தன்னார்வலா்கள் ஈடுபடவுள்ளனா். அரசால் வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்து தரமானது, பாதுகாப்பானது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றதாகும்.

எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...