கோவை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (மார்ச் 3) நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கோயில்கள், டோல்கேட், பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1088 கிராமப்புற மையங்கள், 497 நகா்ப்புற மையங்கள் என மொத்தம் 1,585 மையங்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து நாளை (மார்ச் 3) வழங்கப்படவுள்ளது.

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இம்முகாம்களுக்குத் தேவையான சொட்டு மருந்து அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. இப்பணியில் சுகாதாரத் துறையினா், அங்கன்வாடிப் பணியாளா்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா், தன்னார்வலா்கள் ஈடுபடவுள்ளனா். அரசால் வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்து தரமானது, பாதுகாப்பானது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றதாகும்.

எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...