கோவையில் தென்னையில் வாடல் நோய் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கள ஆய்வு

தென்னையில் வாடல் நோய் கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இன்று (01.03.2024) பூசனைகோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் தென்னையில் வாடல் நோய் பரவலாக தாக்கி தேங்காய் உற்பத்தியை பெருமளவில் பாதித்துள்ளது.



இது குறித்து தகவல் சேகரிக்கவும் இந்த நோயை கட்டுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிவிக்கவும் கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஆகிய மூன்று வட்டாரங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விவசாயிகள் மற்றும் அரசு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இன்று முதல் மூன்று நாட்கள் (மார்ச் 01-03, 2024) கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.



இந்த கள ஆய்வில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், வேளாண் அலுவலர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இன்று (01.03.2024) பூசனைகோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.



இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்களின் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்களைச் சேகரித்து ஆய்வறிக்கை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...