கோவையில் தென்னையில் வாடல் நோய் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கள ஆய்வு

தென்னையில் வாடல் நோய் கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இன்று (01.03.2024) பூசனைகோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் தென்னையில் வாடல் நோய் பரவலாக தாக்கி தேங்காய் உற்பத்தியை பெருமளவில் பாதித்துள்ளது.



இது குறித்து தகவல் சேகரிக்கவும் இந்த நோயை கட்டுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிவிக்கவும் கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஆகிய மூன்று வட்டாரங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விவசாயிகள் மற்றும் அரசு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இன்று முதல் மூன்று நாட்கள் (மார்ச் 01-03, 2024) கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.



இந்த கள ஆய்வில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், வேளாண் அலுவலர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இன்று (01.03.2024) பூசனைகோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.



இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்களின் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்களைச் சேகரித்து ஆய்வறிக்கை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...