சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் புகையிலை விற்பனை செய்த பெண் கைது

சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்துவந்த குழந்தைராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் 893 பாக்கெட் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில், தனியார் கல்லுாரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு நேற்று (பிப்.29) தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பைக்கில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் பெண் ஒருவர் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் கோவை பீளமேட்டை சேர்ந்த மனோரஞ்சிதம், 38 என்பது தெரிந்தது.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் காரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றை மறைத்து வைத்திருந்த குழந்தைராஜூ என்பவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் தப்பினார். பின் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார், 893 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...