சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் புகையிலை விற்பனை செய்த பெண் கைது

சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்துவந்த குழந்தைராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் 893 பாக்கெட் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில், தனியார் கல்லுாரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு நேற்று (பிப்.29) தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பைக்கில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் பெண் ஒருவர் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் கோவை பீளமேட்டை சேர்ந்த மனோரஞ்சிதம், 38 என்பது தெரிந்தது.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் காரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றை மறைத்து வைத்திருந்த குழந்தைராஜூ என்பவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் தப்பினார். பின் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார், 893 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...